"அகத்தியர் மூலிகை மர்மம் "

"அகத்தியர் மூலிகை மர்மம் " -௧


★ நாவல் வேர் கொட்டை பொடியை தேனில் உண்ண கிராணி மூலம் நீங்கும்.

★ சித்திரமூலத்தை உலர்த்தி பொடித்து குடிநீராக்கி குடிக்க பித்தம் சீதக்கழிச்சல் பெருவயிறு(தொந்தி) எலும்பு சுரம் நீர்வேட்கை தீரும்.

★ நிலாவாரை பொடியை சுடுநீரில் கொள்ள பெருவயிற்றை(தொந்தி) குறைக்கும்.

★ தும்பையை குடிநீராக்கி குடிக்க கொடிய பித்தம் நீங்கும்.

★ கரிசலாங்கண்ணி பெண்களை வசியப்படுத்தும் கண்நோய்கள் வெளுப்பு நோய் இருமல் ஆகியவற்றை நீக்கும்.

★ ஆவாரை பிரமேக நோயை நீக்கும்.

★ சங்கங்குப்பி வேரப்பொடி மேகநோய்களை நீக்கும்.

★ தழுதாழை சமூலம் பித்தம் வாதம் தொடர்பான சூலை நோய்களை போக்கும்.

★ முடக்கத்தான் இலை முடக்குவாதம் பிடிப்புகள் மலக்கட்டு சீதக்கழிச்சல் ஆகியவற்றை நீக்கும்.

★ முட்காவேளை சமூலத்தை குடிநீராக்கி குடிக்க கழிச்சல் காசம் சுரங்கள் தீரும் காயகற்ப மூலிகை.

★ கொல்லங்கோவை கிழங்கை பாலில் அவித்து உண்ண விஷக்கடிகள் நீங்கும்.

★ முத்தக்காசால் மூலம் வயிற்று கேடுகள் வாந்தி நீர்வேட்கை நீங்கும்.
إرسال تعليق (0)
أحدث أقدم